இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 277 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த அனைவரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 627 ஆக காணப்படுகின்றது.
மேலும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 135 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.