அரச அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதியற்ற கட்டுமானங்களை நிறுவி பயிர்களை பயிரிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மக்களின் பொருள் உரிமைகள் பறிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் .
மேலும், ஆகஸ்ட் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னதாக அந்த இடத்தை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும், மேற்கண்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.