குறித்த பகுதிக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் ஊடாக அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.
பிரதேசத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்து, எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
நட்டஈடு பணம் அறவிடப்படாவிட்டால் எதிர்காலத்தில் அமைச்சு இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
