இது தாழமுக்கம் என்ற நிலையிலிருந்து சூறாவளி என்ற நிலைக்கு தீவிரம் அடைந்துள்ளதன் காரணத்தினால் கடந்த 02ஆம் திகதி நான் ஏற்கனவே இந்த பதிவில் தெரிவித்ததை போன்று பிராந்திய விசேட வளிமண்டலவியல் நிலையத்தினால் (Regional Specialized Meteorological Centre - RSMC) இதற்கு மாண்டஸ் (Mandous - pronounced as Man-Dous) எனும் பெயர் RSMC இனால் வழங்கப்பட்டுள்ளது.
இது தற்போது திருகோணமலையிலிருந்து கிழக்கு-வடகிழக்காக 370km தூரத்திலும் , யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்காக 550km தூரத்திலும் , காரைக்காலில் இருந்து தென்கிழக்காக 560km தூரத்திலும், சென்னையிலிருந்து தென்கிழக்காக 640km தூரத்திலும் தற்போது மையம் கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர பிரதேசத்தின் புதுச்சேரிக்கும் சிவஹரிகோட்டாவிற்கும் இடையே எதிர்வரும் 09ஆம் திகதி இரவு
65km/h - 75km/h வேகத்தில் வீசும் காற்றுடன் இப்பிரதேசத்தை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
