உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
தனியார் துறையின் கடன் வழங்குநர்களும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடி தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.